செய்திகள்

‘பன்டி’ விளக்கமறியலில்

களுத்துறை சிறைச்சாலை பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பன்டி எனப்படும் சதுரங்க புஸ்பகுமாரவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வேளை, எதிர்வரும் 28ம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

செல்லக் கதிர்காமம் பகுதியில் மறைந்திருந்த நிலையில் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கடந்த 21ம் திகதி சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

n10