செய்திகள்

பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 5 பேர் கைது

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தற்கொலைத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புள்ளதாக ஹெரவப்பொத்தானைப் பகுதியில் வைத்து மேலும் 5 பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.அவர்கள் தற்கொலைத் தாக்குதல்களுடனும் நேரடி தொடர்பு கொண்டவர்கள் என்று சந்தேகம் எழுந்துள்ளதாகவும் இவர்கள் புலனாய்வுப் பிரிவுகளால் கிடைக்கப்பெற்ற தகவலினை அடுத்தே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.

இவர்கள், அநுராதபுரம் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் பல இடங்களில், முஸ்லிம் பிரிவினைவாதம் தொடர்பான பிரசங்கங்களை நடத்தியுள்ளார்கள் என பொலிஸார் கூறியுள்ளனர்.மேலும் உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களுடன் தொடர்புபட்டு, தற்போது வெளிநாடொன்றில் தங்கியிருக்கும் பிரதான சந்தேகநபரொருவருடன் இவர்கள் நெருங்கிய தொடர்புகளைப் பேணியுள்ளார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.(15)