செய்திகள்
பஸ் விபத்தில் 22 பேர் காயம்
கண்டி- மகியங்கனை வீதியில், தனியார் பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில், 22 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேகக்கட்டுப்பாட்டை இழந்ததாலேயே, குறித்த பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் விபத்து, இன்று அதிகாலை 12.15 மணியளவில் இடம்பெற்றதாகவும் பொலிஸார் மேலும் கூறியுள்ளனார்.
கொழும்பில் இடம்பெற்ற மதம் சார்ந்த விழாவொன்றில் பங்கேற்ற பின்னர், வீடுகளுக்குத் திரும்பிக்கொண்டிருந்த பஸ்ஸே, இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
n10