செய்திகள்

பாடசாலைகளை திறப்பது தொடர்பான கல்வி அமைச்சின் அறிவித்தல்

நாளை திங்கட்கிழமை முதல் தரம் 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக பாடசாலைகள் மீள திறக்கப்படவுள்ளன.
அதன்படி, பாடசாலைகள் காலை 7.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு பிற்பகல் 3.30 மணிக்கு நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்பின்னர் எதிர்வரும் 10ஆம் திகதி முதல் அனைத்து வகுப்புகளுக்காகவும் பாடசாலைகள் திறக்கப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பாடசாலைகளில் சுகாதார பாதுகாப்பு ஏற்படுகள் தொடர்பாக கல்வி அதிகாரிகளினால் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை எதிர்வரும் பொது தேர்தலுக்கு பாடசாலைகளை தயார்ப்படுத்துவது தொடர்பில் விழிப்புணர்வுகளை வழங்குவதற்கு சகல பாடசாலை அதிபர் மற்றும் பிரதி அதிபர்கள் ஜூலை மாதம் 28 ,29, 30, 31 ஆம் திகதிகள் பாடசாலையில் தங்கியிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கால பகுதியில் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு உதவி தேர்தல் ஆணையாளர்களுடன் கலந்துரையாடி தேர்தல் நடவடிக்கைக்காக பாடசாலைகளில் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சு குறிப்பிடப்பட்டுள்ளது. -(3)