செய்திகள்

பாடசாலையில் நோய்வாய்ப்பட்ட மாணவியுடன் வைத்தியசாலைக்கு செல்ல தயங்கிய ஆசிரியர்கள்

பாடசாலையில் நோய்வாய்ப்பட்ட மாணவியை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு ஆசிரியர்கள் தயக்கம் காட்டிய சம்பவமொன்று கண்டியில் பதிவாகியுள்ளது.
கண்டி பகுதியிலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
13 வயது மாணவியொருவர் திடீரென பாடசாலையில் நோய்வாய்ப்பட்டுள்ள நிலையில் தற்போது நாட்டில் காணப்படும் வைரஸ் அச்சுறுத்தலால் பாடசாலையில் ஆசிரியர்கள் அந்த மாணவியை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல தயக்கம் காட்டியுள்ளனர். அம்பியூலன்ஸ் பாடசாலைக்கு வந்த போதும் அந்த மாணவியுடன் செல்வதற்கு எந்தவொரு அதிகாரியும் முன்வரவில்லையெனவும் பின்னர் பொலிஸ் அதிகாரியொருவர் பாடசாலைக்கு வந்து ஆசிரியர் ஒருவரை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பிரச்சினையால் அந்த மாணவியை 15 நிமிடங்கள் கழித்தே வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)