செய்திகள்

பாடசாலை மாணவர்கள் நான்கு பேர் கைது

நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோட்டன் பிரிட்ஜ் கிரிவன்எலிய சிங்கள மகா வித்தியாலயத்தில் கணணி, மடிக்கணணிகளில் மற்றும் பாடசாலை அதிபர் காரியாலயத்தில் உள்ள சில மென்பொருட்களை களவாடிய என்ற குற்றச்சாட்டில் அதே பாடசாலையில் கல்வி பயிலும் 10ம் வகுப்பு மாணவர்கள் நால்வரை எதிர்வரும் 3ம் திகதி வரை கண்டி வெரகல சிறுவர் இல்லத்தில் வைக்குமாறு அட்டன் பதில் நீதவான் எஸ்.இராஜேந்திரன் உத்திரவிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

பாடசாலையில் தொடர்சியாக பல பொருட்கள் களவாடப்படுவதாக நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் நிலையத்தில் பாடசாலை அதிபரால் முறைபாடு செய்யப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் பொலிஸார் பாடசலைக்கு சென்று விசாரணைகள் மேற்கொண்டதோடு சந்தேகத்தின் பேரில் 10ம் வகுப்பில் கல்வி பயிலும் நான்கு மாணவர்களை நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் 30.05.2015 அன்று கைது செய்து அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் 30.05.2015 அன்று ஆஜர்ப்படுத்தியுள்ளனர்.

இதன்போது அட்டன் பதில் நீதவான் எஸ்.இராஜேந்திரன் குறித்த நான்கு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 3ம் திகதி வரை கண்டி வெரகல சிறுவர் இல்லத்தில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் போது சந்தேகப்பட்ட நான்கு மாணவர்களின் வீட்டிலிருந்து களவாடப்பட்ட பொருட்களை மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.