செய்திகள்

பாராளுமன்றத்தில் ரணில் வென்றாலும் அவரால் மீண்டும் பிரதமராக முடியாதாம்

பாராளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்க தரப்பினர் பெரும்பான்மையை காட்டி வெற்றிப் பெற்றாலும் ரணில் விக்கிரமசிங்கவினால் பிரதமராக முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எம்.பியான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மையானவர்களின் பாராளுமன்றத்தில் ஆதரவை பெறக் கூடியவர் என நம்பும் ஒருவரையே ஜனாதிபதி நியமிப்பார். இதன்படி பாராளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்க தரப்பினர் பெரும்பான்மையை காட்டி வெற்றிப் பெற்றாலும் ரணில் விக்கிரமசிங்கவினால் பிரதமராக தனாக பிரதமராக முடியாது. என அவர் தெரிவித்துள்ளார். -(3)