செய்திகள்

பிணைமுறி மோசடி : குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்கிறது சு.க

பிணை முறி மோசடியுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் இருப்பதாக இராஜங்க அமைச்சர் லக்‌ஷ்மன் யாப்பா தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 8ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி இது தொடர்பாக நடவடிக்கைகளை ஆரம்பிப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். -(3)