செய்திகள்

பிரதமர் ரணில் வடக்கு விஜயம் : வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பார்

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வட பகுதி மக்களுக்கான நிவாரண உதவிகளை துரிதப்படுத்தும் நோக்கில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை மறுதினம் 28ஆம் திகதி கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இதன்போது நிவாரண பணியில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகள் பாதுகாப்புத் தரப்பினர், மதத் தலைவர்கள் சிவில் அமைப்பு பிரதிநிதிகள் உட்பட பலரையும் பிரதமர் சந்திக்க இருப்பதாகவும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். -(3)