செய்திகள்

புத்தாண்டு பௌத்த சுபநேர பஞ்சாங்கம் ஏப்ரல் முதல் வாரத்தில்

புத்தாண்டு பௌத்த சுபநேர பஞ்சாங்கம் ஏப்ரல் முதல் வாரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படும் என்று கலாசார திணைக்களம் தெரிவித்துள்ளது.

பௌத்த சுபநேர பஞ்சாங்கம் ஐயாயிரம் பிரதிகள் அச்சிடப்படவுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை புத்தாண்டுக் காலத்தில் நுகர்வோரின் தேவைகளை இயன்றளவு நிறைவேற்றுவதற்கு சகல ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூட்டுறவு மொத்த விற்பனவு நிலையத்தின் தலைவர் ரி.எம்.கே.தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

புதிதாக 50 சதொச கிளைகள் திறக்கப்படவுள்ளதாகவும் நுகர்வோரின் வசதி கருதி இம் மாத இறுதியிலிருந்து புத்தாண்டு காலம் வரை சதொச திறக்கும் நேரம் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

n10