செய்திகள்

பெரும் எதிர்பாப்புக்கு மத்தியில் தமிழ் மக்கள் பேரவையின் முக்கிய கூட்டம் நல்லூரில் ஆரம்பம்

2வடக்கு மாகாணசபையின் ஆட்சி இன்றுடன் நிறைவடையும் நிலையில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் அடுத்த கட்ட அரசியல் பிரவேசம் தொடர்பாக எதிர்பார்ப்புகள் வலுத்துள்ளது.இதனிடையே இன்று நடைபெறும் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது அரசியல் பயணம் குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் மக்கள் பேரவையின் மிக முக்கியமான கூட்டம், நல்லூர் கந்தசுவாமி ஆலய சுற்றாடலில் உள்ள நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில் ஆரம்பமாகியுள்ளது.இக்கூட்டத்தை இன்று புதன்கிழமைகாலை 10 மணிக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு ஆரம்பித்துவைத்தார்.(15)