செய்திகள்
பொது கருத்துக்கு ஏற்ப செயல்படுவோம்
ஐக்கிய நாடுகள். மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தில் பொது கருத்துக்கு ஏற்ப செயல்படுவோம் என்று இந்தியா தெரிவித்துள்ளது.
ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் மேபரவையில் 34-வது கூட்டத்தொடரில் இலங்கை குறித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றினார்.
ஆக்கபூர்வமாக ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலமாகவே மனித உரிமைகளைக் காத்திட முடியும். அதன் அடிப்படையில் ஐக்கிய நாடுகள். மனித உரிமை மேபரவையில் இந்தியாவின் செயல்பாடு அமைந்திருக்கும்.
கடந்த 2015-ல் ஐநாவில் அமெரிக்கா ஆதரவிலான இலங்கை தீர்மானம் விவாதத்துக்கு வந்தது. இப்போதும் அதேபோன்ற தீர்மானம் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் ஆதரவில் முன் வைக்கப்பட்டுள்ளது.
எங்களது நோக்கம் இலங்கை தமிழர்களின் உரிமைகள், நலன்களைப் பாதுகாப்பதாகும். இதை இருவழிகளில் சாதிக்க முடியும்.இலங்கை தமிழர்கள் பிரச்சினை தொடர்பான. உறுப்பினர்களின் மன வேதனை எனக்குப் புரிகிறது. இலங்கை மீதான தீர்மானத்தில் பொதுக் கருத்து அடிப்படையில் செயல்பட முடிவு செய்துள்ளோம் என்று அவர் கூறினார்.
n10