செய்திகள்

பொலிஸ் மா அதிபரால் ‘சேர்’ என அழைக்கப்பட்டவருக்கு உத்தரவிட்ட ‘சேர் ‘ யார்?

பொலிஸ் மா அதிபரால் ”சேர்” என அழைக்கப்பட்ட நபருக்கு மற்றுமொரு சேர் உத்தரவிட்டுள்ளதாகவும் அந்த சேரின் குடும்பப் பெயர் ”ஆர்” என்ற எழுத்திலிருந்து ஆரம்பிக்குமெனவும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
”பொலிஸ் மா அதிபரால் சேர் என அழைக்கப்பட்ட நபருக்கு ஒரு சேர் உத்தரவிட்டுள்ளார். அவர் யாரென நான் சிறிய குறியீடொன்றை வழங்குகின்றேன். அதனை வைத்து நீங்கள் அந்த நபர் யாரென கண்டுபிடித்துக்கொள்ளுங்கள். அவரின் பரம்பரை பெயரின் முதலெழுத்து ”ஆர்” என்ற எழுத்திலிருந்து ஆரம்பக்கிறது. என அவர் தெரிவித்தார். -(3)