செய்திகள்

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் உட்பட பொலிஸ் அதிகாரிகள் 17பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாமென்ற சந்தேகத்தின் பேரில், இதுவரை சுமார்35,000 இற்கு மேற்பட்டோர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் உட்பட பொலிஸ் அதிகாரிகள் 17பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 10 பேர், பொலிஸ் விஷேட அதிரடிப்படையை சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.இதனால் சுமார் 400பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் மேலும் சிலர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.(15)