செய்திகள்

போக்குவரத்து திணைக்களமே மிகவும் ஊழல் நிறைந்த நிறுவனம் : ஹிருனிகா

இலங்கையில் உள்ள எல்லா திணைக்களங்களை விடவும் கூடுதலாக ஊழல் காணப்படும் இடம் போக்குவரத்து திணைக்களமே என்று ஐக்கிய தேசிய கட்சி எம்.பி ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

சாரதி அனுமதி அட்டை அச்சிடுவதில் மிகப்பெரும் அளவில் பண மோசடி இடம்பெறுவதாகவும் தென் ஆபிரிக்க நிறுவனம் ஒன்றுடன் சாரதி அனுமதி அட்டைகளை அச்சிடும் ஒப்பந்தம் செய்யபட்டதாகவும் ஒப்பந்த காலமான 3 வருடங்கள் கழிந்த பின்னர் இன்னமும் ஒப்பந்தம் நிறுத்தப்பபடவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

ஒரு அட்டை அச்சிட 1700 ரூபா அறவிடப்படுவதாகவும் இதில் அரசாங்கத்துக்கு 360 ரூபா மட்டுமே கொடுக்கப்படுவதாகவும் மிகுதி 1300 ரூபா தென் ஆபிரிக்க நிறுவனத்துக்கு கொடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.