செய்திகள்

மகிந்த தலைமையில் கட்சி தலைவர்கள் கூடினர் : பிரதமர் தொடர்பாக கலந்துரையாடல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையில் நேற்று மாலை ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற்றுள்ளது.
இதன்போது தற்போதைய அரசியல் நிலவரங்கள் , அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரை , பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சர்ச்சை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை பிரதமரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விசேட அறிக்கைகளை வெளியிடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)