செய்திகள்

மக்களின் உரிமைகளை பாதுகாப்பது உயர்நீதிமன்றத்தின் முக்கிய கடமை

சட்டத்தின் அதிகாரம் மற்றும் மக்களின் உரிமைகளை பாதுகாப்பது உயர்நீதிமன்றத்தின் முக்கிய கடமை என, பிரதம நீதியரசர் கே.ஶ்ரீபவன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய பிரதம நீதியரசராக உள்ள அவர் இன்று ஓய்வு பெறுகிறார்.

இதனை முன்னிட்டு உயர்நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற விஷேட நிகழ்வின் போது உரையாற்றிய வேளையே ஶ்ரீபவன் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

அத்துடன் தனக்குரிய கடமைகளை தான் உரிய முறையில் நிறைவேற்றியதாக நம்புவதாகவும் அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.

n10