செய்திகள்
மட்டக்களப்பு-திருகோணமலை வீதியில் கார் விபத்து
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் வேகமாக வந்த கார் தடம்புரண்ட நிலையில் அதனை செலுத்திவந்தவர் சிறு காயங்களுடன் உயிர்தப்பியுள்ளார்.
இன்று பிற்பகல் மட்டக்களப்பு-திருகோணமலை வீதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் கார் தலை கீழாக நிற்பதை படத்தில் காணலாம்.
மட்டக்களப்பில் இருந்து திருகோணமலைக்கு சென்ற காரே இவ்வாறு விபத்தில் சிக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.