செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை பிடிக்க இன்று முதல் விசேட நடவடிக்கை

மதுபோதையில் வாகனத்தை செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்காக இன்று முதல் விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்போது பொலிஸாரிடம் சிக்கும் சாரதிகளை விடுவிப்பதற்காக அழுத்தங்களை பிரயோகிப்போருக்கு எதிராகவும் நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை இந்த நடவடிக்கைகளில் ஈடுபடும் பொலிஸாருக்கு பரிசுகளும் வழங்கப்படவுள்ளதாகவும் பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. -(3)