செய்திகள்

மன்னார் கீரிசுட்டான் காட்டுப்பகுதியில் யுவதி ஒருவரின் உருக்குலைந்த சடலம்

மன்னார், கீரிசுட்டான் காட்டுப்பகுதியில் இருந்து பெண்ணொருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டதாக தெரியவருகின்றது.

மடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கீரிசுட்டான் காட்டுப்பகுதியிலேயே இச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதுடன் சடலம் அருகில் பெண் அணியும் சுடுதால், ஜெல்மட், பெண்ணுக்குரிய பாதணி என்பவனவும் காணப்படுகின்றது. அதனடிப்படையில் இது பெண்ணின் சடலமாக இருக்கலாம் எனவும் சந்தேகம் கொள்ள்படப்டுள்ளதுடன் சடலம் மிகவும் அழுகிய நிலையில் காணப்பட்டுள்ளது.

குறித்த சடலத்தினை பார்வையிடுவதற்காக மன்னார் நீதிவான் சென்றிருந்தார்.

மேலதிக விசாரணைகளை மடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

N5