செய்திகள்
மழை தொடரும் : மின்னல் குறித்து எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்!
இலங்கைக்கு அருகில் உருவான வளிமண்டல தாழமுக்கம் காரணமாக தற்போது நாட்டில் பல பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள மழையுடனான கால நிலை இன்னும் சில தினங்களுக்கு தொடருமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை மழையுடனான கால நிலையின் போது கடும் இடி , மின்னல் ஏற்படுமெனவும் இது தொடர்பாக அவதானமாக இருக்குமாறும் அந்த நிலையம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
குறிப்பாப சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் இவ்வாறான கால நிலையை எதிர்பார்க்க முடியுமென அந்த நிலையம் தெரிவித்துள்ளது. -(3)