செய்திகள்

மாகாண சபை தேர்தல் தொகுதிவாரி முறையிலேயே நடக்கும் : ஜனாதிபதி

நாட்டில் இனி நடைபெறும் சகல தேர்தல்களும் ஒரே தேர்தல் முறையில் நடைபெற வேண்டுமெனவும் இதன்படி எதிர்வரும் மாகாண சபை தேர்லையும் தொகுதிவாரி முறையில் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தான் விருப்பு வாக்கு முறைமையை ஒழிப்பதாக மக்களுக்கு வாக்குறுதியளித்துள்ளதாகவும் இந்த வாக்குறுதியை எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் நிறைவேற்றுவேன் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்று ஜனாதிபதியின் இல்லத்தில் நடைபெற்ற வட மத்திய மாகாண ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கிடையேயான சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். -(3)