மாவீரர் நாள் நிகழ்வுக்காக எழுச்சி பூர்வமாக தயாராகி வருகிறது கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம்
தாயக விடுதலைக்காகத் தம் உயிரை உவந்தளித்த வீர மறவர்களை நினைவு கூருவதற்குத் தாயக மக்கள் எழுச்சி யுடன் தயாராகியுள்ளனர். மாவீரர் துயிலும் இல்லங்கள், நினைவுத் தூபிகள், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் என்பவற்றில் இன்று மாவீரர் நினைவேந்தல் உணர்வுபூர்வமாகக் கடைப்பிடிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் இன்று மாலை நடைபெறும் மாவீரர் நாள் நிகழ்வில் அனைவரையும் பங்கேற்குமாறு கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.மேலும் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் மாவீரர் நாள் நிகழ்வுக்காக எழுச்சி பூர்வமாக தயாராகி வருகிறது. அப்பகுதி எங்கும் மஞ்சள் சிவப்பு கொடிகள் கட்டப்பட்டு துயிலும் இல்லம் எழுச்சிக் கோலம் பூண்டுள்ளதை அவதானிக் கின்றது.(15)