செய்திகள்

மாவீரர் நாள் நிகழ்வுக்காக எழுச்சி பூர்வமாக தயாராகி வருகிறது கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம்

தாயக விடு­த­லைக்­கா­கத் தம் உயிரை உவந்­த­ளித்த வீர மற­வர்­களை நினைவு கூரு­வ­தற்­குத் தாயக மக்­கள் எழுச்­சி­ யு­டன் தயா­ரா­கி­யுள்­ள­னர். மாவீ­ரர் துயி­லும் இல்­லங்­கள், நினை­வுத் தூபி­கள், யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழ­கம் என்­ப­வற்­றில் இன்று மாவீ­ரர் நினை­வேந்­தல் உணர்­வு­பூர்­வ­மா­கக் கடைப்­பி­டிக்­கப்­ப­ட­வுள்­ளது.

இந்நிலையில் இன்று மாலை நடைபெறும் மாவீரர் நாள் நிகழ்வில் அனைவரையும் பங்கேற்குமாறு கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.மேலும் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் மாவீரர் நாள் நிகழ்வுக்காக எழுச்சி பூர்வமாக தயாராகி வருகிறது. அப்பகுதி எங்கும் மஞ்சள் சிவப்பு கொடிகள் கட்டப்பட்டு துயிலும் இல்லம் எழுச்சிக் கோலம் பூண்டுள்ளதை அவதானிக் கின்றது.(15)kanakapuram-maveerar-261118-seithy (1) kanakapuram-maveerar-261118-seithy (3) kanakapuram-maveerar-261118-seithy (4)