செய்திகள்

மீண்டும் பதவிகளை ஏற்குமாறு முஸ்லிம் எம்.பிக்களுக்கு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை

பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் தமது அமைச்சு பதவிகளை பொறுப்பேற்குமாறு பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேற்று மாலை கண்டியில் விசேட மாநாடொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு அவர்கள் இவ்வாறாக தெரிவித்துள்ளனர்.
குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகியுள்ளவர்கள் தவிர்ந்த மற்றைய முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரையும் மீண்டும் பதவிகளை பொறுப்பேற்குமாறு நாங்கள் கோரிக்கை விடுக்கின்றோம். என அவர்கள் தெரிவித்துள்ளனர். -(3)