முல்லைதீவு வட்டுவாகல் பாலத்துக்கு மேலாக நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் பாதிப்பு
முல்லைத்தீவு_ புதுக்குடியிருப்பு பகுதியை இணைக்கும் வட்டுவாகல் பாலத்துக்கு மேலாக நீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கின்றது. நீர் பாலத்துக்கு மேலாக பெருக்கெடுத்து ஓடுவதால் பணிகளுக்காக செல்பவர்களும், மாணவர்களும் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். ஒவ்வொரு மழைகாலங்களிலும் குறித்த பாலம் இவ்வாறான நிலைமைக்கு செல்வதோடு ஆபத்தான முறையில் பிரயாணிகள் பயணம் செய்யவேண்டிய நிலையும் காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இன்று அதிகாலை முதல் வட்டுவாகல் பாலத்துக்கு மேலாக நீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கின்றது. நீர் பாலத்துக்கு மேலாக பெருக்கெடுத்து ஓடுவதால் பல விபத்துகள் குறித்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.அத்துடன் நீர் வரத்து அதிகரித்துள்ளமையால் பாலம் முழுமையாக சில இடங்களில் மூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.(15)