செய்திகள்

முல்லைத்தீவு கரைதுறைப்பற்றில் வெள்ளத்தில் சிக்குண்ட மக்களை மீட்கும் பணி தீவிரம்

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவிலுள்ள தண்ணிமுறிப்பு குளம் உடைப்பெடுக்கும் நிலையிலுள்ளதால் வான் கதவுகள் திறக்கப்பட்டது.இதனால் அப்பகுதியிலுள்ளவர்கள் அனர்த்தத்தில் சிக்கியுள்ளனர். அதில் சிலரை மீட்க முடியாத இக்கட்டான சூழலில் உள்ளனர்.இந்நிலையில் அப்பகுதியிலுள்ளவர்களை மீட்பதற்காக வருகை தந்த இராணுவமும், கடற்படையினரும், குமுழமுனை பொதுமக்களின் ஒத்துழைப்புடன் தற்போது மீட்பு பணியை மேற்கொள்ள படகுமூலம் சென்று கொண்டிருக்கின்றனர்.குறித்த பகுதிக்கு விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மக்கள் 11 பேர் வெள்ளத்தில் சிக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.(15)