செய்திகள்

மூழ்கியது நாவலப்பிட்டி நகரம்…

மலையகத்தில் பெய்துவரும் கடும் மழையைத்தொடர்ந்து நாவலப்பிட்டி நகரத்தில் ஒரு பகுதி நீரில் மூழ்கியுள்ளது. இதனால் 26.04.2018 அன்று மாலை வாகன போக்குவரத்துக்கும் தடை ஏற்பட்டது.

நாவலப்பிட்டி நகரத்தில் தபால் அலுவலகத்தின் முன்பாகவும், நாவலப்பிட்டி – கண்டி வீதியில் ஒருபகுதியும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

அத்தோடு நீர் செல்லும் வடிக்கான்கள் மூடியதனால் நீர் வெளியேறி வீதிக்கு செல்வதனால் பிரதான வீதியினூடான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நகரின் பாதைகளில் வெள்ளபெருக்கெடுத்ததுடன், நகருக்கு வருகைத்தந்தோர் பல சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர்.