செய்திகள்

மேலதிக ரயில்கள் சேவையில்

தமிழ்-சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு சென்ற மக்கள் கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களுக்கு வருவதற்காக இன்றும் மேலதிக ரயில்கள் சேவையில் ஈடுபடும் என்று ரயில் பொதுமுகாமையாளர் பி.ஏ.பி.ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று காலை 7.05ற்கும் 11.45ற்கும் பிற்பகல் ஒரு மணிக்கும் மாலை 5.45ற்கும் காலி ரயில் நிலையத்தில் இருந்து மருதானை வரை மேலதிக ரயில்கள் சேவையில் ஈடுபடும் என்று குறிப்பிட்டார்.

காலை 8 மணிக்கு யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் இருந்தும் காலை 8.30ற்கு பண்டாரவளை ரயில் நிலையத்தில் இருந்தும் கொழும்பு கோட்டை வரை மேலதிக ரயில்கள் சேவையில் ஈடுபடும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்து சபை எதிர்வரும் 25ம் திகதி வரை 1700 பஸ் வண்டிகளை மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

n10