மோட்டர் சைக்கிளில் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற இருவர் ஓமந்தை பொலிசாரால் கைது
ஓமந்தையில் வீதியால் சென்று கொண்டிருந்த யுவதி ஒருவரின் ஐந்து பவுண் தங்கச் சங்கிலியினை அறுத்துக் கொண்டு மோட்டர் சைக்கிளில் தப்பிச் சென்ற இரு இளைஞர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, ஓமந்தை, நவ்வி கிராமத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வீதியால் சென்று கொண்டிருந்த யுவதி ஒருவரினை பல்சர் ரக மோட்டர் சைக்கிள் ஒன்றில் பின்தொடர்ந்த இளைஞர்கள் குறித்த யுவதி அணிந்திருந்த ஐந்து பவுண் தங்கச்சங்கிலியினை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட யுவதி ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்திருந்தார். இதனையடுத்து குறித்த பகுதிக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் சம்பவத்துடன் தொடர்பு பட்ட சந்தேகத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றினை கைப்பற்றியிருந்தனர். தொடர்ந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் மோட்டர் சைக்கிளில் சென்ற இளைஞர் ஒருவரை கைது செய்ததுடன் அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் மற்றைய இளைஞனையும் கைது செய்யுத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஒமந்தைப் பொலிசார் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
N5