யாழில் அதிக வெப்பம் காரணமாக குளிர்மைக்காக மது அருந்தினாராம் ஆசிரியர்
கோப்பாய் பொலிஸ் பிரிவில் வீதிப் போக்குவரத்துக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸாரால், ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.மதுபோதையில் வாகனம் செலுத்தினார் என்று அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த அவர், நீதிமன்றில் நேற்று முற்படுத்தப்பட்டார். அதன்போதே வெப்பம் அதிகமாக உள்ளதால் குளிர்மைக்காக ஆசிரியர் மது அருந்தினார். ஆனால் அவர் குடிகாரர் இல்லை” என்று யாழ்ப்பாண நீதிவான் மன்றில் முற்படுத் தப்பட்ட ஆசிரியர் சார்பில் சட்டத்தரணி தெரிவித்தார்.
ஆசிரிருக்கு 7 ஆயிரத்து 500 ரூபா தண்டம் விதித்தது. ஆயிரத்து 500 ரூபா அரச செலவாக அறவிடுமாறும் மன்று உத்தரவிட்டது. ஆசிரியரின் சாரதி அனுமதிப் பத்திரத்தை 9 மாதங்களுக்குத் தடுத்துவைக்குமாறும் நீதிமன்ற பொலிஸாருக்கு மன்று கட்டளையிட்டது.(15)