செய்திகள்

யாழில் இரு வேட்பாளர்களின் விருப்பு வாக்கு எண்ணிக்கை தொடர்பில் நள்ளிரவு தாண்டியும் பாரிய குழப்ப நிலை – சசிகலா ஆதரவாளர்கள் மீது தாக்குதல்

யாழில் கூட்டமைப்புக்கு கிடைத்த ஆசனங்கள் மூன்றில் முதல் ஆசனத்தை சிறிதரன் வென்றிருந்தார்.இந்நிலையில் ஏனைய இருவர் சசிகலாவா, சித்தார்த்தனா என்ற குழப்பம் நீடித்தது. இந்நிலையில் சசிகலா முன்னிலை பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் சித்தார்த்தனர் சுமந்திரன் இடையே போட்டி நிலவியது.தொடர்ந்து மானிப்பாய் தொகுதி வாக்குகளை மீள எண்ணுமாறு சுமந்திரன் தரப்பு கோரிய நிலையில் வாக்குகள் மீள எண்ணப்பட்டது.இறுதியில் 2ம் இடத்தை சுமந்திரனும் 3ம் இடத்தை சித்தார்த்தனும் பெற்று வெற்றியடைந்ததாக முடிவு கிடைத்தது.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையில் மோசடி இடம்பெற்றது என தெரிவித்து யாழ் மத்திய கல்லூரி வாக்கெண்ணும் நிலையத்தில் நின்றவர் அங்கு வந்த சுமந்தஅவருக்கு எதிராக எதிர்ப்பில் ஈடுபட்டனர்.இதேவேளை போத்தல் என்று வீசப்பட்தாக கூறப்படும் நிலையில் சுமந்திரனின் பாதுகாப்புக்கு வந்த அதிரடிப்படையினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினர் தவராசா துவாரகன் உட்பட சிலர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை நள்ளிரவு 2 மணிவரை காத்திருந்து சரியான நிலைவரத்தை அறிவிக்கும்படி நான் கேட்டிருந்தேன். இருந்தாலும் அவர்கள் காலதாமதம் செய்தார்கள். அதன் பின்னர் இறுதியாக எனது விருப்பு வாக்கு நிலை நான்காவதாக அறிவிக்கப்பட்டது.இந்த மாற்றம் எவ்வாறு ஏற்பட்டது என்பது மிகவும் ஆச்சரியமாகவும், கேள்விக்குறியாகவும் உள்ளது. இருப்பினும் இதனைப்பற்றி தமிழரசுக் கட்சித் தலைவரிடம் முறையிடவுள்ளேன். அத்துடன், தேர்தல் ஆணையாளரிடமும் இதைப்பற்றி தெரிவித்து இதற்கான விளக்கங்களைக் கோரவுள்ளேன் என சசிகலா ரவிராஜ் தெரிவித்துள்ளார்.(15)IMG-5093-1024x768 IMG-5095-1024x768