செய்திகள்

யாழ்ப்பாணத்தில் கடந்த ஐந்து நாட்களில் 500 கிலோ கிராம் கேரள மீட்பு

யாழ்ப்பாணத்தில் கடந்த ஐந்து நாட்களில் கடற்படை 500 கிலோ கிராம் கேரள கஞ்சாவை கைப்பற்றி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அத்துடன் கடந்த 35 நாட்களில், ஒரு தொன் (988 கிலோ) கடற்படை கண்டுபிடித்தது, அவற்றில் 700 கிலோவிற்கும் அதிகமானவை வட கடலில் மட்டும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு காங்கேசன்துறை பகுதியில் இருவேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 157 கிலோ கேரள கஞ்சாலை கடற்படை கைப்பற்றியுள்ளது.44 கிலோ கஞ்சா ஓரிடத்திலும் 113 கிலோ கஞ்சா மற்றொரு இடத்திலும் கைப்பற்றப்பட்டுள்ளன.இது தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து இரண்டு கையடக்கத் தொலைபேசிகள், ஜி பி எஸ் கருவி ஒன்று, மற்றும் மூன்று சிம் அட்டைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.(15)