செய்திகள்

யாழ் இந்திய உயர்ஸதானிகர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள் போராட்டம்

வடமாகாண கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் இந்திய கடற்படையினரால் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி யாழில் அமைந்துள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தை முற்றுகையிடும் கவனயீர்ப்பு போராட்டமொன்று தற்போது நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

வடமாகாண கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் யாழ் பிரதான வீதியிலுள்ள சமாசத்தின் முன்பாக இப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு யாழில் அமைந்துள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அத்துடன் யாழ் மாவட்ட அரச அதிபர் அலுவலகம், வட மாகாண ஆளுநர் அலுவலகத்திற்குச் சென்று மகஜர் கையளிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.(15)