செய்திகள்

யாழ். கொக்குவில் சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டவர் ஆவா குழு உறுப்பினர்

ஆவா குழுவினைச் சேர்ந்த அசோக் என்றழைக்கப்படும் குறித்த இளைஞன், அவரது வீட்டில் பாரிய ஆயுதமொன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த இளைஞன் யாழில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவரென்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.மேலும் அவர் இதற்கு முன்னர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டிருந்தார். அத்தோடு இன்று அவருக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த நிலையிலேயே சுற்றிவளைப்பின்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். தலையாழிப் பகுதியில் இராணுவம், கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து சுற்றுவளைப்பு நடவடிக்கையினை மேற்கொண்டனர்.இதன்போது ஒரு வீட்டினை சோதனையிட்டபோது சைக்கிள் பட்டி மற்றும் அலுமினிய குழாய் ஆகியவற்றை கொண்டு உருவாக்கப்பட்ட பாரிய ஆயுதம் ஒன்றினை பொலிஸார் மீட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து வீட்டிலிருந்த குறித்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் யாழ். கொக்குவில் பகுதியில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின்போது கைது செய்யப்பட்டவர் ஆவா குழுவைச் சேர்ந்தவரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.(15)