செய்திகள்

யாழ்.பல்கலைக்கழகத்தில் தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு

இந்திய வல்லாதிக்கத்துக்கு எதிராக ஜந்து கோரிக்கைகளை முன்வைத்து அகிம்சை வழியில் உணவொறுப்புப் போராட்டம் செய்து வீர காவியமான தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு தியாகி திலீபன் தன் உணவொறுப்புப் போராட்டத்தை ஆரம்பித்த நேரத்தில் பல்கலைக் கழகத்தில் நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பமாகியது.பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பெருமளவானோர் நிகழ்வில் கலந்து கொண்டு, ஈகச் சுடரேற்றி, மலர் சூடி அஞ்சலித்தனர்.அதனைத் தொடர்ந்து திலீபன் நினைவுகள் விருட்சமாக வேண்டும் எனும் எண்ணத்தில் பயன்தரு மரக்கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டன.

அத்துடன், “உயிர்கொடை அளித்தவர் நினைவாய் அளித்திடுவோம் குருதிக்கொடை” என்ற வாசகத்துடன் இரத்தான முகாம் அமைத்து அதிகளவான மாணவர்கள் குருதிக்கொடைகளை அளித்துள்ளனர்.மேலும் தியாக தீபம் திலீபன் உண்ணாவிரத்ததை ஆரம்பித்த நேரமான காலை 9.30 மணியளவில் யாழ்.பல்கலைக்கழகத்திலும் நினைவுநாள் நிகழ்வு ஆரம்பமாகியது.(15)Thiyaagi-Thileepan-Remembrance-Jaffna-University-1 Thiyaagi-Thileepan-Remembrance-Jaffna-University-2 Thiyaagi-Thileepan-Remembrance-Jaffna-University-3 Thiyaagi-Thileepan-Remembrance-Jaffna-University-4 Thiyaagi-Thileepan-Remembrance-Jaffna-University-7