செய்திகள்

யாழ்.போதனா வைத்தியசாலையில் “அபயம் அழைப்பு சேவை” என்ற னிதாபிமான சேவை உதயமானது

யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்றய தினம் “அபயம் அழைப்பு சேவை” எனற உன்னத பணி தொடங்கப்பட்டுள்ளது.உளநெருக்கடி, விரக்தி ஏற்படுகின்ற நிலையில் தொடர்பு கொள்பவர்களுக்கு 24 மணி நேர வைத்திய ஆலோசனை சேவை எதிர்வரும் 15 மார்கழி தொடக்கம் முழு அளவில் வழங்கப்படவுள்ளது.போதனா வைத்தியசாலைப்பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி தலைமையில் நேற்று வைபவ ரீயாக ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த நிகழ்வில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் மனநல வைத்திய நிபுணர்கள் சிவயோகன்,சிவதாஸ் ,பிரேமகிருஷ்ணா,சிவன்சுதன்,நளாயினி ,கன்னங்கரா ,கஜந்தன் ,துஷ்யந்தன் மற்றும் வைத்திய அதிகாரிகள் சிரேஷ்ட தாதிய உத்தியோகத்தர்கள், உதவி பொலிஸ் அத்தியட்சகர் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

வடக்கு மாகாணத்தில் அண்மைக்காலமாக தற்கொலைக்கு முயற்சிப்போர் மற்றும் அதனால் சாவடைவோர் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகின்றது.இந்நிலையில் இவ்வாறு சேவை தேவைப்படுவோர் 071 071 2345 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்வதன் மூலம் இலவச ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள முடியும்.அபயம் நிறுவனம் இதற்கான முழு அனுசரணையும் செய்கின்றது.(15)2 3 4