செய்திகள்

ரணிலை மீண்டும் நிராகரித்த ஜனாதிபதி : சஜித் இன்று ஜனாதிபதியை சந்திப்பார்

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகள் குழுவொன்று இன்றைய தினம் மீண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளனர்.
நேற்று (16) மாலை ஜனாதிபதிக்கும் அந்த கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையே நடைபெற்ற கலந்துரையாடலின் போது சபாநாயகரின் அறிவித்தலை ஜனாதிபதி நிராகரித்துள்ளார். அத்துடன் பிரதமராக ரணில் விக்கிரசிங்கவை ஏற்றுக்கொள்ள மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலைமையில் மீண்டும் அது தொடர்பாக இன்றைய தினம் கலந்துரையாடலை நடத்துவதற்கு ஐக்கிய தேசிய கட்சியினர் தீர்மானித்துள்ளனர்.
இன்று மாலைக்குள் அந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. -(3)