செய்திகள்

ரயில்வே வேலை நிறுத்தம் தொடர்கிறது : பயணிகள் அவதி!

கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து நேற்று நள்ளிரவு முதல் ரயில்வே தொழிற்சங்கங்களினால் அரம்பிக்கப்பட்டுள்ள வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது.
இதனால் இன்று காலையிலும் மாலையிலும் கொழும்பு உள்ளிட்ட நகர் பகுதிகளுக்கு ரயில் மூலம் தொழிலுக்கு செல்வோர் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
சகல ரயில் நிலையங்களிலும் தற்போது விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை வரையில் இந்த போராட்டம் தொடரவுள்ளது. -(3)