செய்திகள்

வடமராச்சியில் நேற்று மீண்டும் விடுதலைப் புலிகளின் பெயரில் சுவரொட்டிகள்

தமிழீழ விடுதலை புலிகளின் உத்தியோகபூா்வ இலட்சினையுடன் மதிப்புக்குரிய தமிழீழ மக்களுக்கு. என விழித்து தமிழ் மக்கள் சமூக பிறழ்வு நடத்தைகளில் ஈடுபட கூடாது. எனவு ம் அவ்வாறு நடத்தைகளில் ஈடுபடுபவா்கள் திருந்தி வாழவேண்டும் எனவும், அதனை செய்யாதவா்கள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் எழுதப்பட்டு தமிழீழ விடுதலை புலிக ளின் புலனாய்வு பிரிவு என உரிமை கோரப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று வடமராட்சி கிழக்கு பகுதிகளில் அதே சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன. அதிலும் நேற்று முன்தினம் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் சிவப்பு நிறத்தில் காணப்பட்ட நிலையில் நேற்று ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் வெள்ளை நிறத்திலும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பானது மௌனத்துக்குள் இயங்கு நிலையில் உள்ளது எனவும் தமிழீழ பண்பாட்டு காலாச்சார விழுமியங்களுக்கமைய செயற்பட வேண்டுமென்றும் எச்சரிக்கை விடுத்தும் வடமராட்சி கிழக்குப் பகுதியில் நேற்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(15)Ltte Notice