செய்திகள்

வட மாகாணத்தில் கடற்றொழில் நடவடிக்கையை அபிவிருத்தி செய்ய தீர்மானம்

வட மாகாணத்தில் கடற்றொழில் நடவடிக்கையை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் பருத்தித்துறை, பேசாலை ஆகிய இடங்களில் இரு மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளன. அத்துடன், யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் 8 மீன்பிடித் துறைமுகங்களும் முல்லைத்தீவில் 6 மீன்பிடித் துறைமுகங்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று மீன்பிடித் துறைகங்களையும் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் கடற்றொழில் துறையை மேம்படுத்துவதற்காக 158 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(15)