செய்திகள்

வயாவிளான் காணிகளை விடுவிக்குமாறு ஆர்ப்பாட்டம்

வலி. தெற்கு வயாவிளான் பகுதியிலுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் – அச்சுவேலியினூடாக தெல்லிப்பளைக்குச் செல்லும் பிரதான வீதியான வயாவிளான் – தோலகட்டி வீதியிலுள்ள இராணுவ காவலரணுக்கு முன்பாக பெருமளவான பொதுமக்கள் ஒன்று கூடி இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

1990 ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த வலிகாமம் மக்கள் வாடகை வீடுகளிலும், தனியார் வீடுகளிலும், முகாம்களிலும் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், இராணுவத்தின் காவலரண் அமைந்துள்ள வயாவிளான் தோலகட்டி பிரதான வீதியை இன்று பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எதிர்வரும் 4 ஆம் திகதி ஒரு தீர்க்கமான முடிவு கிடைக்காவிடின் அனைவரும் தமது காணிகளுக்குள் உட்பிரவேசிக்கவுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டனர்.

யுத்தம் முடிவடைந்ததும் உனக்கு எம் நிலம் எதற்கு, இந்த மண் எங்களின் சொந்த மண், எமது நிலங்களை விட்டு இராணுவத்தை வெளியேற்று, போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளைத் தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

download (1) download (2)