செய்திகள்

வவுனியாவில் ஆங்கில மொழிப் பாடசாலை மீது திருடர்கள் கைவரிசை

வவுனியா, வைரவப்புளியங்குளம், வைரவர் கோவில் வீதியில் அமைந்துள்ள தனியார் ஆங்கில மொழி பாடசாலையில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இன்று காலை வழமை போன்று குறித்த ஆங்கில மொழி பாடசாலைக்கு ஆசிரியர்கள் சென்ற சமயத்தில் தளபாடங்கள் ஆங்காங்கே காணப்பட்டதுடன், கதவுகளும் திறந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஆங்கில மொழிப் பாடசாலை இயக்குனரால் முறைப்பாடொன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருடப்பட்ட பொருட்கள் மற்றும் பணத்தின் பெறுமதி இதுவரை தெரியவரவில்லை. மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

IMG_0374[2]

N5