செய்திகள்

வவுனியாவில் காணாமல்போன கிணறு கண்டுபிடிப்பு!

வவுனியா நகரின் பிரதான வீதியில் இரந்த நிலையில் காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்த குழாய்க்கிணறு இன்று வவுனியா நகரசபையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் வவுனியா நகரின் பிரதான வீதியின் அருகே காணப்பட்ட பொதுக்கிணறு ஒன்று காணாமல் போயுள்ளதாக அண்மையில் முறையிடப்பட்டிருந்தது. இன்று சம்பவ இடத்திற்குச் சென்று நகர சபையின் ஊழியர்களின் உதவியுடன் குறித்த இடத்தை தோண்டிப்பார்த்த போது குழாய் கிணறு குறித்த பகுதியில் மண்ணால் மூடப்பட்ட நிலையில் இருப்பது தெரியவந்தது. எனினும் அதை எவரும் பயன்படுத்தவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து அப்பகுதியில் குழாய்க்கிணறு பொருத்தும் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றோம். இன்னும் இரண்டு வராங்களில் அந்தப்பகுதியில் குழாய்க்கிணறினை புனர்நிர்மானித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடப்படவுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.

News (17) News (19) News (20)

N5