வவுனியாவில் பூரண ஹர்த்தால்: இயல்பு நிலை முடக்கம்
வவுனியாவில் இன்று பூரண ஹர்த்தால் காரணமாக இயல்பு நிலை முற்றாக முடக்கியுள்ளதுடன் ஆங்காங்கே பொலிசாரும் வீதி பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன், தினச்சந்தை என்பன மூடப்பட்டுள்ளதுடன் பேருந்து நிலையம், பிரதான வீதிகள், வங்கிகள், அரச நிறுவனங்கள் பொது மக்கள் இன்றி வெறிச்சோடிக்காணப்படுகின்றன. பாடசாலைகளுக்கும் மாணவர்கள் செல்லாமையால் அவையும் செயலிழந்தன. தென்பகுதியில் இருந்து வடக்கு நோக்கு வரும் பேரூந்துகள் வவுனியாவுடன் தமது சேவையை இடைநிறுத்தியுள்ளதுடன் போக்குவரத்தும் முற்றாக முடங்கியுள்ளது.
பொலிசார் வீதிகளில் கடமைகளில் ஈடுபட்டுள்ளதுடன், வீதிகளில் பொதுமக்கள் இன்றி வெறிச்சோடிக்காணப்படுகின்றது.
வடகிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்கு ஆதரவு தெரிவித்து இன்று மேற்கொள்ளப்பட்டு வரும் பூரண ஹர்ததாலுக்கு இன, மத, பேதங்களைக் கடந்து பல தரப்பினரிடமிருந்தும் பூரண ஆதரவு வவுனியாவிலும் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
N5