செய்திகள்

வவுனியாவில் பொலிசாரின் மோட்டர் சைக்கிள் திருட்டு: சீசீடிவி கமரா வீடியோ சிக்கியது VIDEO

வவுனியா, குருமன்காடு சந்திப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொலிசார் ஒருவரின் மோட்டர் சைக்கிள் திருட்டுப்போயுள்ளது. குறித்த மோட்டர் சைக்கிளை நபரொருவர் கொண்டு செல்லும் காட்சியும் சீசீடிவி கமராவில் பதிவாகியுள்ளது.

இன்று மதியம் 1.28 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, குருமன்காடு சந்திப்பகுதியில் அமைந்துள்ள கடை ஒன்றுக்கு சிவில் உடையில் வந்த பொலிசார் தனது மோட்டர் சைக்கிளை குறித்த கடையின் முன்னால் நிறுத்தி விட்டு பொருட்களை கொள்வனவு செய்த போது குறித்த இடத்தில் நிறுத்தப்பட்ட மோட்டர் சைக்கிள் காணாமல் போயிருந்தது.

இதனையடுத்து அப்பகுதியில் உள்ள கடையில் பொருத்தப்பட்டிருந்த சீசீடிவி கமராவை பரிசோதித்த போது நபரொருவர் குறித்த மோட்டர் சைக்கிளை ஹெல்மட் இன்றி மன்னார் வீதி வழியாக செலுத்திச் செல்கின்றமை பதிவாகியுள்ளது. இதனை அடிப்படையாக வைத்து வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதேவேளை, குறித்த பகுதியில் சம்ப நேரத்தில் போக்குவரத்து பொலிசார் இருவர் கடமையில் நின்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

IMG_7281

N5