செய்திகள்

வவுனியா நெடுங்கேணியில் வீதி அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டுவரும் மூன்று தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று

வவுனியா, நெடுங்கேணியில் வீதி அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டுவரும் மூன்று தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.குறித்த ஊழியர்கள் பிரபல தனியார் ஒப்பந்த நிறுவனம் ஒன்றில் பணிபுரிகின்றதுடன் உள்ளூர் தொழிலாளிகளும் அவர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளனர். பல்வேறு இடங்களுக்கும் அவர்கள் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் வர்களில் 25 பேருக்கு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் பி.சி.ஆர். பரிசோதனைகள் நேற்று முன்னெடுக்கப்பட்டிருந்தன.இதையடுத்து குறித்த பரிசோதனை முடிவுகளில் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.(15)