செய்திகள்

வவுனியா பராமரிப்பு நிலையம் ஒன்றில் 18 வயதுடைய பெண்னோருவர் தற்கொலை முயற்சி

வவுனியா, கணேசபுரத்தில் அமைந்துள்ள பராமரிப்பு நிலையத்தில் வசித்து வந்த பெண்னோருவர் கழுத்தினை வெட்டி தற்கொலைக்கு முயன்ற நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா, குளுமாட்டுச்சந்தி, கணேசபுரம் பகுதியில் உள்ள பராமரிப்பு நிலையம் ஒன்றில் வசித்து வந்த 18 வயதுடைய குறித்த பெண் கடந்த கடந்த 28 ஆம் திகதி அன்று இரவு 9.00 மணியளவில் தனது கழுத்தினை அறுத்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டு இரவு 9.30மணியளவில் வவுனியா வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சைகளின் பின்னர் தற்போது வைத்தியசாலையின் விடுதி 2 இல் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்கொலைக்கான காரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

N5