செய்திகள்

வவுனியா- மகிழங்குளத்தில் பொருத்து வீட்டிற்கான அடிக்கல் நாட்டு விழா இடம்பெற்றது

தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் ஏற்பாட்டில் வவுனியா- ஒமந்தை, மகிழங்குளத்தில் அமைக்கப்படவுள்ள பொருத்து வீட்டிற்கான அடிக்கல்லினை, நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தானால் நாட்டி வைக்கப்பட்டது.அத்துடன் இவ்வீடுகள் பதினான்கு நாட்களில் இருந்து மூன்று வாரத்திற்குள் பூரணப்படுத்தி மக்களிற்கு கையளிக்கப்படவுள்ளன.

மாவட்ட செயலாளர் சமன் பந்துலசேனவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் தர்மபால செனவிரத்தின, முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் கனகரட்னம், வவுனியா பிரதேச செயலாளர் கமலதாஸ், செட்டிக்குளம் பிரதச செயலாளர் சிவகரன் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.பன்னிரண்டு இலட்சத்து எண்பதாயிரம் ரூபாய் செலவில் இந்த பொருத்து வீடு அமைக்கப்படவுள்ளதுடன் முதற்கட்டமாக இருபது வீடுகள் அமைக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.(15)