செய்திகள்

வவுனியா மாவட்ட முஸ்லிம் அதிபர், ஆசிரியர்களை சந்தித்து கலந்துரையாடினார் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட்

வவுனியா மாவட்ட முஸ்லிம் பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் நேற்று (21) வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது முஸ்லிம் பாடசாலைகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், முஸ்லிம் அதிபர், ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், பாடசாலையின் தரத்தை உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இச்சந்திப்பில் வட மாகாண சபை உறுப்பினர் ஜயதிலக, வவுனியா நகர சபை உறுப்பினர்களான பாரி மற்றும் லரீப், அமைச்சரின் இணைப்பாளர் முத்து முஹம்மது, மாந்தை உப்புக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் அமீன், அமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரி தாஹிர், கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் முஷர்ரப், அதிபர்கள், ஆசிரியரி;கள் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

riz-m2

riz-m4

N5