செய்திகள்

வவுனியா வடக்கு பிரதேச செயலாளருக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் 55 குற்றச்சாட்டுகள் அடங்கிய முறைப்பாடு: ஜி.ரி.லிங்கநாதன்

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன் அவர்களுக்கு எதிரான 55 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய ஆவணங்களை வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள் இன்று காலை கொழும்பில் அமைந்துள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் செயலாளர் திருமதி சாந்தி ஜெயசேகரா அவர்களிடம் கையளித்துள்ளார்.

இதன் போது இதற்கான நடவடிக்கையினை உடன் எடுப்பதாக ஆணைக்குழுவின் செயலாளர் உறுதி மொழியளித்துள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரித்துள்ளார்.

அத்துடன் குறித்த முறைப்பாட்டின் பிரதிகள் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன அவர்களிடமும் கையளிக்கப்பட்டதாகவும், கணக்காய்வாளர் நாயகம் குணவர்தன அவர்களிடமும் 55 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய ஆவணங்கள் கொண்ட கோவை கையளிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ள வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் இது குறித்து அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

N5